close
Choose your channels

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிவகார்த்திகேயன் செய்த மாபெரும் உதவி

Tuesday, March 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தாராளமாக நிதி வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்த வேண்டுகோளை பிரதமர் மற்றும் முதல்வர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

இதனை அடுத்து தொழிலதிபர்களும் பாலிவுட் திரையுலக பிரபலங்களும் ஆந்திர மாநில நடிகர்களும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 லட்சம் நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெப்சி தொழிலாளர்களின் நலனுக்காக ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்தார் என்பது தெரிந்ததே. சிவகார்த்திகேயனை அடுத்து மேலும் சில நடிகர்கள் லட்சக்கணக்கில் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.