இந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி.. அவரே கூறிய நெகிழ்ச்சியான விஷயம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவர் இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் வீராங்கனை ஒருவருக்கு செய்த உதவி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்த, அருண்ராஜ் காமராஜ் இயக்கத்தில் உருவான ’கனா’ திரைப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில், இந்திய கிரிக்கெட் வீராங்கனையான சஜீவன் சஜனா என்பவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கேரளாவை சேர்ந்த சஜீவன் சஜனா சமீபத்தில் அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயன் தனக்கு செய்த உதவியை பற்றி கூறியுள்ளார்.
கேரளாவில் வயநாடு பகுதியை சேர்ந்த நாங்கள் ஒருமுறை, மழை வெள்ளத்தால் நாங்கள் பாதிக்கப்பட்டு, எங்களுடைய உடமைகளை இழந்து தவித்தோம். அப்போது சிவகார்த்திகேயன் என்னை தொடர்பு கொண்டு, ‘உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா? தேவைப்பட்டால் தயங்காமல் என்னிடம் கேளுங்கள்’ என்று கூறினார். அப்போது, நான் அவரிடம், ‘என்னிடம் இருந்த கிரிக்கெட் பேட் மழை வெள்ளத்தால் முழுதாக அடித்து செல்லப்பட்டது. எனக்கு புதிய பேட் தேவைப்படுகிறது’ என்று கூறினேன். உடனே அவர் எனக்காக புதிய பேட் வாங்கி அனுப்பி வைத்தார்.
அந்த நேரத்தில், நான் சேலஞ்சர் டிராபியில் கலந்து கொள்ள இருந்தேன். அந்த பேட் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. சிவகார்த்திகேயன் செய்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்,"* என்று கூறியுள்ளார்.
இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments