சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' குறித்த சூப்பர் அப்டேட்!

  • IndiaGlitz, [Monday,November 04 2019]

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர் ’இரும்புத்திரை’ இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஹீரோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் டிசம்பரில் கிறிஸ்மஸ் திருவிழா விருந்தாக இந்த படம் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட்லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அடுத்த அப்டேட்டாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் வியாழன் அன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் அமைந்த இந்த சிங்கிள் பாடலை வரவேற்க சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்தப் பாடல் நிச்சயம் அவரது ரசிகர்களை தாளம் போட வைக்கும் என்று நம்பலாம்

கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேடங்களில் ஆக்சன்கிங் அர்ஜூன் மற்றும் இவானா நடித்து வரும் இந்த படம் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது

More News

குழந்தை தத்தெடுக்கும் பிக்பாஸ் நடிகை

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் தற்போது பிசியாக உள்ளனர்.

இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் நடிகை!

கடந்த இரண்டு நாட்களாக தெய்வப்புலவர் திருவள்ளுவர் எந்த மதம்? அவருடைய உடை எந்த வண்ணம்? என திராவிட கட்சிகளும் பாஜகவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

'தளபதி 64' படப்பிடிப்புக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்?

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் பத்தே நாட்களில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்து வரும் நிலையில் அவர் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது

சுஜித்தை அடுத்து ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி! திருந்தாத அரசுகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து நடுக்காட்டுப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஐந்து நாட்களாக மீட்க முடியாமல்

உயிருடன் மீட்கப்பட்டும் பலியான ஹரியானா சிறுமி!

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹர்சிங்புரா என்ற பகுதியில் நேற்று மாலை 5 வயது சிறுமி ஒருவர் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறுதலாக கீழே