மூன்றே நாளில் இத்தனை கோடியா? வசூலிலும் 'டான்' ஆன சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Monday,May 16 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் 3 நாட்களில் வசூல் செய்த தொகை திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில், சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘டான்’. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்ததும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது.

இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிய நிலையில் தற்போது இந்த படம் 3 நாட்களில் 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டான்’ திரைப்படம் முதல் நாளில் 13 கோடியும், இரண்டாவது நாளில் 11 கோடியும் மூன்றாவது நாளில் 9 கோடி வசூல் செய்த நிலையில் மூன்றே நாட்களில் 33 கோடி வசூல் செய்ததாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 40 கோடி என்ற நிலையில் பட்ஜெட் தொகையை மூன்றே நாட்களில் நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் மட்டுமின்றி வசூலிலும் சிவகார்த்திகேயன் ‘டான்’ ஆக மாறியுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 

More News

சினிமாவில் இருந்து விலக போகிறேன்: அதிரடியாக பேட்டியளித்த தமிழ் ஹீரோ!

நல்ல கேரக்டர்கள் கிடைக்காவிட்டால் சினிமாவில் இருந்து விலகப் போகிறேன் என தமிழ் ஹீரோ ஒருவர் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியின் ஒரு வருட நினைவஞ்சலி: அருண்ராஜா காமராஜின் உருக்கமான கவிதை!

பிரபல இயக்குனர் அருண் ராஜா காமராஜ் மனைவி கடந்த ஆண்டு மே 17-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான நிலையில் அவருடைய ஒரு வருட நினைவஞ்சலி தற்போது அனுசரிக்கப்பட்டு வருகிறது.

விஜய் பெயரை கேட்டதும் அதிர்ந்த அரங்கம்: கமல் ரியாக்சன் பாருங்க!

நேற்று நடைபெற்ற கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது விஜய் குறித்து பேசியதும் அரங்கமே அதிர்ந்த நிலையில்

'நெஞ்சுக்கு நீதி' படம் பார்த்த தமிழக முதல்வர்: என்ன சொன்னார் தெரியுமா?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான 'நெஞ்சுக்கு நீதி' என்ற திரைப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள

வாரிசு நடிகர்கள் அவித்த முட்டை போல் இருக்கின்றார்கள்: பிரபல நடிகையின் சர்ச்சை கருத்து!

பாலிவுட் நடிகைகளின் வாரிசுகள் அவித்த முட்டை போல் இருக்கிறார்கள் என்று பிரபல நடிகை ஒருவரின் சர்ச்சைக்குரிய விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது