close
Choose your channels

சிவகார்த்திகேயன் படத்தை இயக்க போகிறேனா? கே.வி.ஆனந்த் விளக்கம்!

Wednesday, March 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோ, அயன் உள்பட ஒருசில சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், தற்போது அடுத்த படத்திற்காக தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை கேவி ஆனந்த் இயக்கிவிருப்பதாகவும், இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த கேவி ஆனந்த் தனது அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், தற்போது மாபியா சம்பந்தப்பட்ட கதை ஒன்றின் திரைக்கதையை எழுதி வருவதாகவும், அந்த கதையை எழுதி முடித்தவுடன் தான் ஹீரோ யார் என்பதை முடிவு செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படம் தமிழில் சூப்பர் ஹிட்டான ’நாயகன்’ படம் போன்று மும்பையை சேர்ந்த மாபியா குழு ஒன்றின் சம்பவங்கள் குறித்த கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாபியாவுக்கும் ரவுடிகளுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு என்றும் அதை தெளிவாக கூறும் படம் தான் இது என்றும் கூறிய கேவி ஆனந்த் இந்த படத்தில் அரசியல் இருந்தாலும் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்ட கதை அல்ல என்றும் இது ஒரு கமர்சியல் மற்றும் லவ் டிராக் உள்ள படம் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.