சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் ரிலீஸ் உரிமை: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,June 09 2023]

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் தான் சிவகார்த்திகேயன் தனது பகுதியில் டப்பிங் பணியை முடித்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் ‘மாவீரன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் அடுத்த படம் ‘மாவீரன்’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

யாஷிகா அம்மாவை அடுத்து ரிச்சர்ட் ரிஷியும் விளக்கம்.. அந்த போட்டோ இதற்காகத்தான்..!

சமீபத்தில் அஜித் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆகிய இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில் இருவரும் காதலிக்கின்றார்களா?

சிலைகளோடு சிலையாக உட்கார்ந்திருக்கும் ரம்யா பாண்டியன்..! வைரல் புகைப்படம்..!

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலைகளோடு சிலையாக உட்கார்ந்திருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

இயக்குனர் 'மர்மதேசம்' நாகாவுக்கு என்ன ஆச்சு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த உறவினர்கள்..!

பிரபல இயக்குனர் 'மர்மதேசம்' நாகா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் அவர் நலமுடன்

நடிகை கஜோலுக்கு என்ன ஆச்சு? திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை கஜோல் கடினமான சோதனையில் இருப்பதாகக் கூறி அனைத்துச் சமூக வலைத்தளங்களில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

லண்டன் சென்று கிரிக்கெட் மேட்ச் பார்த்த தமிழ் இயக்குனர்.. கும்ப்ளேவுடன் சந்திப்பு..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டி தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியை தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் நேரில் பார்த்த புகைப்படத்தை