'வேலைக்காரன்' இசை வெளியீடு எப்போது? சிவகார்த்திகேயன் தகவல்

  • IndiaGlitz, [Thursday,July 27 2017]

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் சமூகவலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடியபோது பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவற்றில் ஒன்று அவர் நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்தின் இசை வெளியீடு குறித்த தகவல் ஆகும்.
வேலைக்காரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாகவும், அதனையடுத்து ஒருசில நாட்களில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
'வேலைக்காரன்' படத்திற்கு சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும், இளம் இசைப்புயலுமான அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் - அனிருத் இணைந்த 'எதிர்நீச்சல்', 'மான் கராத்தே', 'காக்கிச்சட்டை' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓவியா இன்னும் மாறவே இல்லை: சிவகார்த்திகேயன்

பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகம் முழுவதும் ஒருசில நாட்களில் பிரபலம் ஆனவர் நடிகை ஓவியா.

அஜித், விஜய், சிம்பு, தனுஷ் குறித்து சிவகார்த்திகேயன்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுடன் சமூக இணையதளம் மூலம் உரையாடியபோது, ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்

பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்: ஜூலி வெளியேற்றப்படுகிறாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர்களாக ஓவியா, ஆரவ், ரைசா ஆகியோர் தேர்வு பெற்றிருந்தபோதிலும், இந்த வாரம் யாரும் எலிமினேட் கிடையாது என்று பிக்பாஸ் நேயர்களுக்கு மட்டும் தெரிவித்துள்ளார்.

சின்னக்குயில் சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் பாடிய, ஆறு தேசிய விருதுகளும் ஏழு பிலிம்பேர் விருதுகளும் பெற்ற சின்னக்குயில் சித்ரா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள்: ஊடகங்களுக்கு சிம்பு வேண்டுகோள்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இழந்த தன்னுடைய புகழை மீண்டும் மீட்க அவர் 'கெட்டவன்' படத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும், 'பில்லா 3' படத்தை தயாரித்து இயக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளிவந்தன...