சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் நாயகி பாலிவுட் பிரபலமா?

  • IndiaGlitz, [Saturday,May 28 2022]

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு பாலிவுட் பிரபலம் நாயகி என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 100 கோடி வசூல் என்ற மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படமான ‘எஸ்கே 21’ படத்தின் நாயகியாக சாய் பல்லவி நடிக்க இருக்கும் நிலையில் ’எஸ்கே 22’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகை நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

சிவகார்த்திகேயன் நடிப்பில் ’மண்டேலா’ இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த படத்தின் நாயகிக்கு அழுத்தமான கேரக்டர் என்பதால் இந்த கேரக்டருக்கு இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என படக்குழுவினர் முடிவு செய்தனர். இதற்காக பிரபல பாலிவுட் நடிகை கைரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை கைரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் ‘ஆர்சி 15’ திரைப்படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசனின் 'விக்ரம்' சாட்டிலைட், டிஜிட்டல் ரிலீஸ் எப்போது?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'விக்ரம்'  திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக

39 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த விருது: 'தேவர் மகன்' நடிகை பெருமிதம்!

39  வருடங்களுக்கு பின் தனக்கு விருது கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி என 'தேவர் மகன்' படத்தில் நடித்த நடிகை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.100 கோடி பட்ஜெட், ஒரு வாரத்தில் வெறும் ரூ.3 கோடி வசூல்: அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!

'ஆர்.ஆர்.ஆர்', 'கே ஜி எஃப் 2' போன்ற தென்னிந்திய திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பாலிவுட் திரைப்படம்

நாளை ஐபிஎல் இறுதி போட்டி: ஏ.ஆர்.ரஹ்மான் தந்த ஆச்சரிய அறிவிப்பு

நாளை ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் மைதானத்தில் தனது நிகழ்ச்சி நடைபெறும் என்று ஒரு ஆச்சரிய அறிவிப்பை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்

ஃபேஸ்புக் மூலம் காதல்: திருமண தினத்தில் மணமகளை அரை நிர்வாணப்படுத்திய மணமகனால் பரபரப்பு

பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த ஒருவர், மணமேடையில் மணமகளை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.