மணிரத்னம் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? 

பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைபடத்தை ’பிச்சைக்காரன்’ பட இயக்குனர் சசி இயக்குவார் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று கூறப்பட்டது. எனவே சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை தயாரிப்பது கமல்ஹாசனா? அல்லது மணிரத்னமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த நிலையில் ’டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்ததாக ’அயலான்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

'பீஸ்ட்' டப்பிங்கை விஜய் சீக்கிரம் முடித்த ரகசியம் இதுதான்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது விஜய் மற்றும் நெல்சன் கட்டிப்பிடித்தவாறு எடுத்துக்கொண்ட புகைப்படம்

தனுஷின் அடுத்த படத்தின் டைட்டில்ட்லுக் குறித்த தகவல்!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில்லுக்  நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5,000 கோடி ஜீவனாம்சம்… வரலாறு காணாத தொகையை வாங்கும் பெண் யார் தெரியுமா?

துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை விட்டு அவருடைய 6 ஆவது மனைவி ஹயா பினட் பிரிந்துள்ளார். மேலும்

அஜித்தின் 'வலிமை' படத்தின் அட்டகாசமான தீம் மியூசிக் ரிலீஸ்!

தல அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

இந்திய அணியில் பெட்டிக் கடைக்காரர் மகன்… தந்தையே பயிற்சி கொடுத்து அரிய சாதனை!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 14 ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளில் துவங்க இருக்கிறது.