close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

Wednesday, June 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் தோல்வி அடைந்தாலும் அவர் தற்போது பி.எஸ்.மித்ரன், ரவிகுமார், பாண்டிராஜ் மற்றும் விக்னேஷ் சிவன் என நான்கு முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நான்கு படங்களையும் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளதால் பிரமாண்டமாக உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது சொந்த நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் இதுவரை 'கனா' மற்றும் 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' என இரண்டு படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் தனது மூன்றாவது தயாரிப்பு படத்தை 'அருவி' இயக்குனர் அருண்பிரபு இயக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அருண்பிரபு இயக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்துவிட்டதால் இன்றைய அறிவிப்பில் நாயகி உள்பட முக்கிய நட்சத்திரங்களில் தகவல்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.