close
Choose your channels

நாலு லைக்கு, எட்டு ஷேருக்கு இப்படியெல்லாம் பேசாதிங்க: சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்

Wednesday, July 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கந்தசஷ்டி விவகாரம் பெரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதும், கந்தசஷ்டி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவை வெளியிட்ட நபருக்கு கண்டனம் தெரிவித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் முருக பக்தர்களும் பாஜகவினரும் இந்துமத ஆதரவாளர்களும் கந்தசஷ்டியை அவதூறு செய்த நபரின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமும், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ என்ற படத்தை தயாரிக்கும் நிறுவனமுமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து கூறியிருப்பதாவது.

முருகர் துதி பாடுவோம், 'பெருமாளே'னு துதிப்போம். அதே நேரம், நம்ம பசங்களுக்கு ஒன்னுனா முன்ன வந்து நிக்குறதும் நாங்கதான்டா! #KarupparKoottam - நாலு likeகு, எட்டு shareகு வேண்டி கண்டதையும் பேசாதீங்க! வாழு, வாழ விடு - இதுதான் நம்ம பண்பாடே. அது தெரியாம வந்துட்டானுங்க mic-அ தூக்கிட்டு!.

இந்த டுவீட்டுக்கு ஆதரவாக ஏராளமான கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.