முடிவுக்கு வந்தது சிவகார்த்திகேயனின் அடுத்த பட படப்பிடிப்பு 

  • IndiaGlitz, [Tuesday,July 16 2019]

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர்கள் பாண்டிராஜ், விக்னேஷ் சிவன், மற்றும் ரவிக்குமார் ஆகியவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் 'கனா' மற்றும் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படங்களை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'வாழ்'. 'அருவி' இயக்குனர் அருண் பிரபு இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

75 நாட்களில் சுமார் 100 லொகேஷன்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று இருப்பதாகவும், இசைக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சுமார் பத்து பாடல்கள் இருப்பதாகவும் பிரதீப் குமார் இசையில் உருவாகியிருக்கும் அனைத்து பாடல்களும் இசை விருந்தாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். 'அருவி' போன்ற ஒரு தரமான படத்தை மீண்டும் அருண்பிரபு தருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'காப்பான்' படத்தின் வியாபாரம் குறித்த முக்கிய தகவல்

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

லோக்கல் பையனுக்கும் அக்ரஹாரத்து பெண்ணுக்கும் காதல்: 'A 1' டீசர்

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த அடுத்த திரைப்படம் 'A 1'. இந்த திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது

சூர்யாவின் 'காப்பான்' இசை வெளியீட்டு தேதி குறித்த தகவல்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் 'காப்பான்'.

விமல் நடித்த அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்!

நடிகர் விமல் நடித்த 'களவாணி 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நீ லூசா? லூசு மாதிரி நடிக்கிறியா? மீராவை வெளுத்து வாங்கிய சாக்சி!

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவராகிய மீராமிதுன் உடம்பு முழுவதும் நயவஞ்சகத்தால் உருவாக்கியது போல் நடந்து கொள்கிறார். சில நிமிடங்களுக்கு முன் பேசியதை பேசவே இல்லை