இயக்குனராகும் நடிகர்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் 

  • IndiaGlitz, [Sunday,August 02 2020]

தமிழ் நடிகர் ஒருவர் இயக்குனராகியுள்ள நிலையில் அவருடைய முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகர் ஆனந்த் ராம். இவர் தற்போது இயக்குனர் ஆகியுள்ளார். இவர் இயக்கும் முதல் திரைப்படத்தின் டைட்டில் ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் குமாரவேல், லீலா, விஷாலினி, ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், மோனிகா, கலக்கப்போவது யாரு பாலா உள்பட பலர் நடிக்க உள்ளனர்

காசிப் இசையமைக்கும் இந்த படத்திற்கு தமிழ்செல்வன் ஒளிப்பதிவும், ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பும் செய்ய உள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

More News

தமிழக கவர்னருக்கு கொரோனா பரிசோதனை: சென்னை மருத்துவமனையில் அனுமதி!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தங்கியிருக்கும் ராஜ்பவனில் ஏற்கனவே மூன்று பேருக்கும் கொரனோ தொற்று உறுதியாகியுள்ள நிலையில்

நானும் ஒரு நாள் அஜித் போல் மாறுவேன்: மீராமிதுன் ஆவேசம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா உள்பட பலரை சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நடிகை மீரா மிதுன்,

முதல்வர் மகன் குறித்த விமர்சனம்: பிரபல நடிகையின் வீட்டில் நடந்த துப்பாக்கி சூட்டால் பரபரப்பு

முதலமைச்சரையும் முதலமைச்சர் மகனையும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

அபிராமி திரையரங்க உரிமையாளருக்கு மத்திய அரசு செய்த கெளரவம்!

இந்தியாவில் சாதனை செய்த பலரது உருவம் பதித்த தபால் தலைகள் அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில் தற்போது சென்னை அபிராமி திரையரங்க உரிமையாளர் ராமநாதன்

என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை காதலித்த காய்கறி வியாபாரி: மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் பரபரப்பு!

தர்மபுரி அருகே இளைஞர் ஒருவர் பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில் அங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்ததாகவும்,