close
Choose your channels

இயக்குனராகும் நடிகர்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் 

Sunday, August 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகர் ஒருவர் இயக்குனராகியுள்ள நிலையில் அவருடைய முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகர் ஆனந்த் ராம். இவர் தற்போது இயக்குனர் ஆகியுள்ளார். இவர் இயக்கும் முதல் திரைப்படத்தின் டைட்டில் ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் குமாரவேல், லீலா, விஷாலினி, ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், மோனிகா, கலக்கப்போவது யாரு பாலா உள்பட பலர் நடிக்க உள்ளனர்

காசிப் இசையமைக்கும் இந்த படத்திற்கு தமிழ்செல்வன் ஒளிப்பதிவும், ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பும் செய்ய உள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.