close
Choose your channels

வடிவேல் பாலாஜியுடனான மலரும் நினைவுகள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Thursday, September 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக் கோளாறு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தி சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 15 தினங்களாக உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான வடிவேல் பாலாஜி, நடிகர் சிவகார்த்திகேயனுடன் ’அது இது எது’ என்ற நிகழ்ச்சியில் பணிபுரிந்துள்ளார். இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

‘அது இது எது’ நிகழ்ச்சியில் எங்கள் இருவரின் கெமிஸ்ட்ரி மிகவும் சூப்பராக இருக்கும் என்று அந்த நிகழ்ச்சியின் இயக்குனரே கூறுவார். அவர் எங்களுக்கு அன்றைய தினத்தின் கான்செப்ட்டை ஒரே ஒரு வரி மட்டும்தான் கூறுவார். நாங்கள் இருவரும் தான் அதனை டெவலப் செய்வோம்.

ஒரு கான்செப்டை கொடுத்தால் உடனே மக்கள் ரசித்து சிரிக்க வைக்கும் வகையான டயலாக் அவரிடம் இருந்து வரும். அவரிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று கூறினார். அவருடன் பணிபுரிந்த ஜாலியான தருணங்கள் இன்று என் கண் முன் வருகிறது குறிப்பாக அவருடைய சிரிப்பை என்னால் மறக்கவே முடியாது என்று நெகிழ்ச்சியுடன் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.