close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் திடீர் மாற்றம்?

Monday, November 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வந்த ’ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

'இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த ஒரு விஞ்ஞானப் படம் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் பாதியில் நின்று உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை மீண்டும் தொடங்க சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளார்.

மேலும் இந்த படத்தை தயாரித்த 24 ஏம் ஸ்டுடியோஸ் டி ராஜா, இந்த படத்தின் தயாரிப்பு பணியில் இருந்து விலகுவதாகவும் அதற்கு பதிலாக சிவகார்த்திகேயன் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்திசிங் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.