close
Choose your channels

சேர்ந்து படம் பண்ணலாமா என்று கேட்ட பிரபல இயக்குனரை கலாயத்த சிவகார்த்திகேயன்!

Thursday, October 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சேர்ந்து படம் பண்ணலாமா என கேட்ட பிரபல இயக்குனரை நடிகர் சிவகார்த்திகேயன் நேரலையில் கலாய்த்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’பிரின்ஸ்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆன்லைன் மூலம் நேரலையில் ரசிகர்களுடன் பேசினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்த நிலையில் இந்த நேரலையில் திடீரென கலந்து கொண்ட பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, அனுதீப் உங்களை டார்ச்சர் செய்தாரா? என்று கேட்டார். அதற்கு காமெடியாக பதில் சொன்ன சிவகார்த்திகேயனிடம், ‘நாம் 2 பேரும் சேர்ந்து எப்போது படம் பண்ணலாம்? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்து பேசிய சிவகார்த்திகேயன், ‘எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம், கதையை எப்போது சொல்விங்க? என்று கேட்டதோடு, பிரேம்ஜி முக்கிய வேடத்தில் நடிக்கும் அந்த படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் தனக்கு என்ன ரோல்? என்று கேள்வி எழுப்பி வெங்கட்பிரபுவை கலாய்த்தார்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் விரைவில் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

சிவகார்த்திகேயன் தற்போது ’மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவர் ‘அயலான்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும், அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.