close
Choose your channels

அப்பா-அம்மாவுக்காக சூர்யா-கார்த்தி செய்த வியப்பான விஷயம்!

Thursday, October 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் பிஸியான நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி என்பது தெரிந்ததே. ஒரு படம் முடிவடைதற்குள் அடுத்த படத்தில் கமிட்டாகி, அடுத்தடுத்து படப்பிடிப்புகளுக்கு சென்று கொண்டிருக்கும் இவர்கள் இருவரும், அப்பா அம்மாவிற்காக 20 நாட்கள் ஒதுக்கியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் வியப்பான விஷயமாக கருதப்படுகிறது

ஆம், அப்பா சிவகுமார், அம்மா லட்சுமி ஆகிய இருவருடனும் சூர்யா, கார்த்திக் மற்றும் பிருந்தா ஆகிய மூவரும் ஐரோப்பிய நாடுகளுக்கு 20 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து திரும்பியுள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தில் சூர்யா, கார்த்தி ஆகியோர் மனைவியோ குழந்தைகளோ கலந்துகொள்ளவில்லை. அதேபோல் பிருந்தாவின் குடும்பத்தினரும் கலந்து கொள்ளவில்லை என்பதும், சிவகுமார் குடும்பத்தினர் மட்டும் 20 நாட்கள் அமைதியாக சுற்றுப் பயணம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

உலகில் உள்ள மற்ற எல்லா விஷயத்தையும் விட அப்பா அம்மாவை காப்பாற்றுவதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ரஜினி உட்பட கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு அறிவுரை கூறி வரும் நிலையில் சூர்யாவும், கார்த்தியும் தங்களது ரசிகர்களுக்கு அறிவுரை கூறுவது மட்டுமன்றி தங்களுடைய சொந்த வாழ்க்கையில் கடைபிடித்து வருகின்றானர் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் வயதான அப்பா, அம்மாவின் செலவுக்கு காசு கொடுத்தாலும் அவர்களுக்கு என ஒருசில நாட்கள் ஒதுக்குவதுதான் ஒரு சிறந்த மகனின் அடையாளமாக இருக்க முடியும் என்பதற்கு உதாரணமாக சூர்யா-கார்த்திக் உள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.