close
Choose your channels

ஞானதந்தையை இழந்து விட்டேன்: நடிகர் சிவகுமார் உருக்கம்!

Tuesday, May 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்கள் இன்று காலமானதை அடுத்து ஒரு ஞான தந்தையை நான் இழந்து விட்டேன் என நடிகர் சிவகுமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்

பிரபல தமிழ் எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்கள் சாகித்ய அகாடமி பெற்றவர் என்பது தெரிந்ததே. அவர் பல நூல்களை எழுதியுள்ளார் என்பதும் அவரது நூல்கள் அனைத்தும் வாசகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

புதுவையில் குடியிருந்து வந்த கி ராஜநாராயணன் அவர்கள் வயது முதிர்வு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். இதனையடுத்து இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கிராமியக் கதைகள் என பல்வேறு தளங்களில் நூல்கள் எழுதிய ராஜ நாராயணன் அவர்கள் எழுதிய நூல்களில் கரிசல் கதைகள், கொத்தைப்பருத்தி, கோபல்ல கிராமம் போன்றவை கி.ராவின் ஆகியவை முக்கியமானவை ஆகும். மேலும் பல நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ’கோபல்லபுரத்து மக்கள்’ என்ற நாவலுக்காக 1991ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எழுத்தாளர் கி ராஜநாராயணன் மறைவு குறித்து நடிகர் சிவகுமார் கூறியிருப்பதாவது: ஞானதந்தையை இழந்து விட்டேன், இப்படி ஒரு மனிதர் இனிமேல் உருவாக முடியாது! இலக்கிய ஆளுமை கீரா அவர்களுக்கு எனது இரங்கல்கள்’ என தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் சீனுராமசாமி தனது டுவிட்டரில், ‘என் இனிய 'கரிசல் காட்டு கடுதாசி' எழுத்தாளர் கி.ராஜநாராயணன் விடைப்பெற்றார். இதய அஞ்சலி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.