close
Choose your channels

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது!

Wednesday, June 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்கு சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாக அறிந்த சிபிசிஐடி போலீசார், டேராடூனில் அவரை கைது செய்ய விரைந்தனர். ஆனால் தமிழ்நாடு போலீசார் வருவதை அறிந்ததும் டேராடூன் மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா தப்பியோடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரை தேடும் பணியில் தீவிரமாக இருந்த காவல்துறையினர் டெல்லி அருகே உள்ள காசியாபாத் என்ற பகுதியில் சற்றுமுன் கைது செய்தனர். இதனை அடுத்து அவர் சென்னை அழைத்து வரப்படுவதாகவும் அவரிடம் விசாரணை செய்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது. சிவசங்கர் பாபாவிடம் நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.