பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்கு சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாக அறிந்த சிபிசிஐடி போலீசார், டேராடூனில் அவரை கைது செய்ய விரைந்தனர். ஆனால் தமிழ்நாடு போலீசார் வருவதை அறிந்ததும் டேராடூன் மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா தப்பியோடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரை தேடும் பணியில் தீவிரமாக இருந்த காவல்துறையினர் டெல்லி அருகே உள்ள காசியாபாத் என்ற பகுதியில் சற்றுமுன் கைது செய்தனர். இதனை அடுத்து அவர் சென்னை அழைத்து வரப்படுவதாகவும் அவரிடம் விசாரணை செய்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது. சிவசங்கர் பாபாவிடம் நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

அந்தரங்க வீடியோ அனுப்பிய மர்ம நபர்: ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வெளியிட்ட சூப்பர் சிங்கர் பாடகி!

பிரபல பாடகி ஒருவருக்கு மர்ம நபர் ஒருவர் அந்தரங்க வீடியோவை அனுப்பிய நிலையில் அந்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள பாடகி,

தேசிய விருது பெற்ற இந்த பிரபல இயக்குனருடன் இணைகிறாரா ஆர்ஜே பாலாஜி!

'எல்கேஜி' மற்றும் 'மூக்குத்தி அம்மன்' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி நடித்த ஆர்ஜே பாலாஜி தற்போது பாலிவுட் படம் ஒன்றில் ரீமேக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஒருவர் ரத்ததானம் செய்யலாமா?

ரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பு விருப்பம் உடைய இளைஞர்கள் இரத்ததானம் செய்ய முன்வரவேண்டும்

பச்சை நிறத்தில் பூஞ்சை தொற்று… ஒருவர் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை

என்னை கருவாச்சின்னு நிறைய பேர் கிண்டல் செஞ்சாங்க: பாடகி ஸ்வாகதா பேட்டி

பாடகி மற்றும் நடிகையான ஸ்வாகதா தன்னை சிறுவயதில் கருவாச்சி என்று பலர் கிண்டல் செய்து உள்ளார்கள் என்று நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.