close
Choose your channels

எனக்கு ஆண்மை இல்லை: சிவசங்கர் பாபாவின் அதிரடி வாக்குமூலம்! 

Monday, August 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எனக்கு ஆண்மை இல்லை என்றும் ஆண்மை இல்லாத என்னால் எப்படி பாலியல் உறவில் ஈடுபட முடியும் என்றும் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியில் படித்த மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவசங்கர் பாபா ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுதள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையில் தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி போலீஸாரிடம் சிவசங்கர் பாபா வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆண்மை இல்லாத நான் எப்படி பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட முடியும் என்றும் அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்து வரும் நீதிபதிகள் ’மகன் மற்றும் மகள் உள்ளபோது ஆண்மையற்றவர் என்று எப்படி கூற முடியும்? என்று கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் வழக்கில் சிக்கிய நித்தியானந்தாவும் இதேபோன்று தனக்கு ஆண்மை இல்லை என்று கூறி வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.