மிஷ்கின் படத்தில் நடிக்க மறுத்த 6 நடிகைகள்

  • IndiaGlitz, [Thursday,July 16 2015]

பிசாசு' பட இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பில் ராம்' நடிக்கவுள்ள திரைப்படம் 'சவரக்கத்தி' என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் நடிகை பூர்ணா, நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரிந்ததே. ஆனால் இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க பூர்ணாவுக்கு முன்னர் இயக்குனர் மிஷ்கின், ஆறு பிரபல நடிகைகளை அணுகியதாகவும், ஆறு நடிகைகளும் அவர் கூறிய கேரக்டரில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.


இதுகுறித்து மிஷ்கின் கூறியபோது, "ஆம், ஆறு நாயகிகள் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். ஆனால் பூர்ணா இந்த படத்தின் நாயகியாக நடிக்க தைரியமாக ஒப்புக்கொண்டார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.இந்த கேரக்டர் அவருக்கு கண்டிப்பாக ஒரு சவாலான கேரக்டராக இருக்கும்.

மேலும் இந்த படத்தின் கதையை நான் எழுதும்போதே, இந்த படத்தின் நாயகனாக இயக்குனர் ராம் நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டேன். ஒரு இயக்குனராக அவரை பார்த்து வியந்த ரசிகர்கள், கண்டிப்பாக ஒரு நடிகராகவும் இந்த படத்தில் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்

இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் நடிக்கவிருக்கும் நான், இந்த படத்திற்காக 15 கிலோ எடையை குறைக்க முடிவு செய்துள்ளேன். ஆதித்யா இயக்கவுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும்.\

இவ்வாறு இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.

More News

அஜீத் போட்டோஷூட்டிற்கு கைமேல் பலன் பெற்ற அப்புக்குட்டி

சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் அறிமுகமான அப்புக்குட்டி அதன்பின்னர் 'அழகர்சாமியின் குதிரை, குள்ளநரிக்கூட்டம், மன்னாரு, மரியான், வீரம் போன்ற பல படங்களில் நடித்தார்......

'த்ரிஷ்யம்' இயக்குனரின் அடுத்த படத்தில் நயன்தாரா

பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' என்ற மாபெரும் வெற்றித் திரைப்படம் கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு, அனைத்திலும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தை அவரே தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்தார்.....

விஜய்யின் ஷோபா திருமண மண்டபம் கைமாறியதா?

இளையதளபதி விஜய், சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் சென்னையில் பல இடங்களை வாங்கியுள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே.....

சிம்பு ரசிகர்களுக்கு ஒரு உற்சாக செய்தி

நீதிமன்ற உத்தரவு காரணமாக வரும் வெள்ளியன்று ரிலீஸாக வேண்டிய சிம்புவின் 'வாலு' திரைப்படம் ரிலீஸாகாததால், கவலையுடன் இருக்கும் சிம்புவின் ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டுவது போல் ஒரு தகவல் தற்போது வெளிவதுள்ளது.......

'கோ 2' முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை. இயக்குனர் சரத்

ஜீவா, கார்த்திகா நாயர் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய மாபெரும் வெற்றிப்படமான 'கோ' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருவது குறித்து நாம் அறிந்ததே......