சூர்யாவுக்கு எதிராக ஒரே ஒரு நீதிபதி, ஆதரவாக ஆறு நீதிபதிகள் கடிதம்: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,September 14 2020]

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நீதிமன்றம் குறித்து அவர் தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையானது. இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் அவர்கள், சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சூர்யாவுக்கு எதிராக ஒரே ஒரு நீதிபதி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய நிலையில் ஆறு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கூட்டாக சூர்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஓய்வு பெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் கூட்டாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக் வேண்டாம்’ என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் 4 மாணவர்கள் மரணம் தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதை போல எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்றும் தெரிவித்துள்ளனர்.

நீட்தேர்வு எதிராக சூர்யா தெரிவித்த கருத்துக்கு ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியுள்ளதை அடுத்து தற்போது ஓய்வு பெற்ற நீதிபதிகள் தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்!!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அக்கறையோடு செயல்பட வில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது

ஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் மாறுமா டெல்லியின் மோசமான ராசி?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் மோசமான சாதனைகளைக் கொண்ட  அணி டெல்லி கேபிடல்ஸ் அணியாகும்.

குப்புறப் படுக்க வைத்தால் கொரோனா நோயாளியைக் காப்பாற்ற முடியுமா??? புதுத்தகவல்!!!

கொரோனா நோய்க்கான சிகிச்சை குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் பல புதுப்புது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

நீட் அறிக்கையை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த டுவீட்!

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நேற்று முன்தினம் 3 மாணவர்கள் பரிதாபமாக பலியான நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வு நடந்தது

சூர்யா உள்நோக்கத்துடன் பேசியிருக்க மாட்டார்: ஓய்வுபெற்ற நீதிபதி கருத்து

நீட் தேர்வு குறித்து அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் நேற்று சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார்.