6 முறை தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


6 முறை தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் கலை இயக்குனர் நிதின் தேசாய் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமீர்கான் நடித்த ’லகான்’ ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித் நடித்த ’தேவதாஸ்’ ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஜோதா அக்பர்’ உள்ளிட்ட பல பிரமாண்டமான படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியவர் நிதின் தேசாய்.
இன்று அவர் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. வரும் 9ஆம் தேதி அவர் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டது உள்ளது.
’டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்’, ’ஹம் தில் தி சுகே சனம்’, ‘லகான்’ மற்றும் ’தேவதாஸ்’ ஆகிய நான்கு திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக கலை இயக்குனராக பணியாற்றியதற்கு அவர் தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கலை இயக்குனர் நிதின் தேசாய் மறைவுக்கு பாலிவுட் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments