சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் எஸ்.ஜே.சூர்யா: இதுதான் காரணம்!

  • IndiaGlitz, [Monday,November 29 2021]

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த ’வாலி’ திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்திற்காக அவர் சுப்ரீம் கோர்ட் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் உருவான ’வாலி’ திரைப்படத்தில் அஜித், சிம்ரன், ஜோதிகா உள்பட பலர் நடித்து இருந்தனர் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வாலி’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை போனிகபூர் வாங்கியிருந்தார் என்பதும் அஜித்தை வைத்தே அவர் ’வாலி’ படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ’வாலி’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என எஸ்ஜே சூர்யா கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிமன்றத்தை அணுகினார் என்பதும் ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து போனிகபூர் ’வாலி’ படத்தின் ரீமேக் பணிகளை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு திரைப்படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும் அதன் ரீமேக் உரிமை கதை எழுதியவருக்கு சொந்தமென ’ஆரண்யகாண்டம்’ பட வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் அந்த தீர்ப்பின் அடிப்படையில் எஸ்ஜே சூர்யா மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

More News

சென்னை மழை முடிவுக்கு வந்துவிட்டதா? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்

இமான் அண்ணாச்சிக்கு கிடைத்த தலைவர் பதவியை பறித்த போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 57வது நாள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் அவர் காலமானார் என்ற தகவல் திரையுலகினர்

'மாநாடு' படத்தின் 3 நாட்கள் வசூல்: சுரேஷ் காமாட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே படக்குழுவினர் அனைவருக்கும் தனித்தனியாக தொலைபேசி மூலம்

கனமழை எதிரொலி: நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை!

தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்