close
Choose your channels

ரிலீசுக்கு தயாராகும் எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம்!

Tuesday, February 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்.ஜே சூர்யா நடித்த ’மான்ஸ்டர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது அவர் ’பொம்மை’ மற்றும் ’உயர்ந்த மனிதன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவரது நடிப்பில் உருவாகி நீண்ட கால தாமதமாகி உள்ள ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வந்த ‘பொம்மை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடித்துள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே ’மான்ஸ்டர்’படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் சாந்தினி தமிழரசன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில், ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படப்பிடிப்பின் இடையே நடந்து வந்ததால் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

"பொம்மை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைச்சாச்சு" என்றும் டீசர் மற்றும் ஆடியோ விரைவில் வெளியாகும் என்றும் இயக்குனர் ராதாமோகன் அவர்களுடன் செய்த பயணம் மிகவும் திருப்தியாக இருந்தது என்றும் எஸ்ஜே சூர்யா இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.