'ஆர்.சி 15' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம்: எஸ்.ஜே.சூர்யா கூறிய ஆச்சரியமான தகவல்!

  • IndiaGlitz, [Monday,September 12 2022]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆர்.சி 15’. ராம்சரண் தேஜா ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய வில்லன் கேரக்டரில் நடிக்க சமீபத்தில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் சமீபத்தில் அவர் ’ஆர்.சி 15’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நான் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருக்கும் போது படப்பிடிப்பை எட்டி பார்த்தபோதும் சரி, ‘நண்பன்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் போதும் சரி, தற்போது ’ஆர்.சி 15’ படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடிக்கும் போதும் சரி, நான் ஷங்கர் அவர்களிடம் கவனித்து அது ஒன்றே ஒன்றுதான். அதே கட்டளை, அதே எனர்ஜி, அதே ஆற்றலை அப்போது பார்த்தது போல் இன்றும் அவரிடம் பார்க்கிறேன். ஷங்கர் அவர்களுடன் மீண்டும் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 

More News

'வேட்டையாடு விளையாடு 2' படத்தில் கமல் கேரக்டர் இதுதான்: ஜெயமோகன் தகவல்!

கமல்ஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'வேட்டையாடு விளையாடு'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் விரைவில்

மகாலட்சுமி வந்தா கல்ல விட்டு அடிங்க: தயாரிப்பாளர் ரவீந்தரின் வீடியோ வைரல்!

தயாரிப்பாளர் ரவிந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த நிலையில் மகாலட்சுமியை பார்த்தால் கல்ல விட்டு அடிங்க என வீடியோ ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தயாரிப்பாளராக மாறிய விஜய்யின் மேனேஜர்: முதல் படத்தின் நாயகி யார் தெரியுமா?

தளபதி விஜய்யிடம் பல ஆண்டுகள் மேனேஜராக இருக்கும் ஜெகதீஷ் தயாரிப்பாளராக மாறி உள்ளார் என்பதும் அவரது முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

விஜய் இந்த படத்தில் நடித்தால் சம்பளம் இல்லாமல் நடிக்க தயார்: பிரபல நடிகர்

 விஜய் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த படத்தில் நான் சம்பளம் இல்லாமல் நடிக்க தயார் என பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்

சீயான் விக்ரம் வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், சீயான் விக்ரம் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.