எனது நடிப்பிற்கு மிகப்பெரிய விருது கிடைத்துவிட்டது: எஸ்.ஜே.சூர்யா டுவிட்!

  • IndiaGlitz, [Saturday,November 27 2021]

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று முன்தினம் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்தை பார்த்த திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் சிம்புவை அடுத்து இந்த படத்தில் நடிப்பிற்காக பாராட்டுகளை பெற்று வருபவர் எஸ்ஜே சூர்யா என்றால் அது மிகையாகாது. மேலும் எஸ்.ஜே.சூர்யாவின் சிறப்பான நடிப்பு இந்த படத்தை வேற லெவல் கொண்டு போய்விட்டது என்று வெங்கட்பிரபு அவர்களே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று ’மாநாடு’ படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு தொலைபேசி மூலம் பாராட்டு தெரிவித்தார் என்பதை பார்த்தோம். அதேபோல் எஸ்ஜே சூர்யாவுக்கும் தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் தனது பாராட்டைத் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறிய எஸ்.ஜே சூர்யா, ’இன்று எனது நடிப்பு திறமைக்காக எனக்கு மிகப்பெரிய விருது கிடைத்ததாக உணர்கிறேன். ரஜினிகாந்த் அவர்களின் அன்பான பாராட்டு இந்த திரையுலக பயணத்தை எதிர்கொள்ள பெரும் பலத்தை அளிக்கிறது’ என்று அவர் கூறியுள்ளார்.

More News

லைகா-யோகிபாபு படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் “பன்னிக்குட்டி” திரைப்படத்தை, 11:11 புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது!

இந்த எண் ஒரு மந்திரமாக இருக்கட்டும்: முதல்வருக்கு நன்றி தெரிவித்த அஜித்-விஜய் இயக்குனர்!

முதல்வர் அறிவித்த தொலைபேசி எண் ஒரு மந்திரமாக இருக்கட்டும் என அஜித், விஜய் படங்களை இயக்கிய இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

4 கோடி பரிசுத்தொகை… வாழ்வா? சாவா? ரியல் Squid game நடத்திய யூடியூபர்!

சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான “ஸ்க்விட் கேம்“ தொடர் உலகம் முழுவதும் பலதரப்பட்ட ரசிகர்களால் பெரிதும்

பணமில்லாமல் லிப்ட் கேட்டே உலகை சுற்றிவரும் இளைஞர்... சுவாரசியச் சம்பவம்!

ஊர் சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால் நாம் வார இறுதி நாட்களில் எங்காவது

ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த பிரபல பாடகியின் தந்தை… துயரச் சம்பவம்!

தெலுங்கு சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம்வருபவர் ஹரிணி ராவ். இவருடைய தந்தை A.K.ராவ் கடந்த