எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,November 23 2015]

'இசை' படத்தின் மூலம் மீண்டும் நாயகனாக ரீஎண்ட்ரி ஆன எஸ்.ஜே.சூர்யா விரைவில் வெளிவரவிருக்கும் கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு எஸ்.ஜே.சூர்யாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு இயக்குனர் பரதனுக்கு சென்றுவிட்டதால், மீண்டும் ஒரு படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா முடிவு செய்துள்ளார்.

அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிப்பதோடு இந்த படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். இந்த படத்திற்கு '174' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு மரணம் நிகழும்போது அந்த மரணத்தை போலீஸார் கொலை என்று சந்தேகித்தால் '174' சட்டத்தை பயன்படுத்தி எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை செய்வார்களாம். இந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு நகைச்சுவை மற்றும் த்ரில் கலந்த ஒரு கதையை இயக்குநர் மணிகண்டன் அமைத்துள்ளார். இவர் இயக்குனர் செல்வராகவனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டிசம்பர் 4 ரேஸில் இணைந்தது ஈட்டி

கடந்த தீபாவளி தினத்தில் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' மற்றும் அஜித்தின் 'வேதாளம்' ஆகிய இரண்டு பெரிய படங்கள் வெளியாகி இரண்டுமே சூப்பர் ஹிட் ஆனது...

'டார்லிங் 2' நாயகியுடன் இணையும் புதுமாப்பிள்ளை ஹீரோ

பிரபுசாலமன் இயக்கிய 'கயல்' படத்தில் அறிமுகமாகி சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுடன் திருமண நிச்சயதார்த்தம்...

எம்.ராஜேஷின் அடுத்த பட டைட்டில் KIK?

சிவா மனசுல சக்தி' முதல் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்ச்வங்க' வரை பல படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவரான...

'நட்டி'யின் அடுத்த படத்தில் நாயகியாகும் 'காலண்டர் கேர்ள்'

பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி என்ற நடராஜன் 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி அதன்பின்னர்...

இந்த வாரம் சமந்தா-எமிஜாக்சன் வாரம்

கோலிவுட் நடிகைகளில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா மற்றும் எமிஜாக்சன் ஆகிய இருவருக்குமே...