This is a beta feature and we would love to hear your feedback? Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அதேபோல் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் 'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி தற்போது நடந்து வருகிறது
இந்த நிலையில் லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், விக்னேஷ் சிவன் இன்னும் ஸ்கிரிப்ட்டை தயார் செய்யவில்லை என்றும் ஸ்கிரிப்ட் தயாரானதும் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது துபாயில் இருக்கும் விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுகாக தான் தயார் செய்து கொண்டிருந்த ஸ்கிரிப்ட் முழுமை அடைந்துவிட்டதாகவும், இந்த ஸ்கிரிப்ட் அனைவரும் விரும்பும் வகையில் திருப்திகரமாக வந்துள்ளதாகவும் தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என சுமாரான படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து நான்கு வெற்றிப்படங்களை கொடுக்க தயார் நிலையில் உள்ளார்