ஷூவுக்குள் பாம்பு: சென்னை பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

  • IndiaGlitz, [Thursday,December 05 2019]

சென்னை கேகே நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் ஷூவுக்குள் பாம்பு இருப்பதை கவனிக்காமல் அதனை சுத்தம் செய்ததால் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்

சென்னை கேகே நகரைச் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி சுமித்திரா தனது வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஷூக்கள் சேரும் சகதியுமாக இருந்ததால் அதனை சுத்தம் செய்ய முயற்சிக்கும் போது அதில் இருந்து திடீரென ஒரு பாம்பு எட்டிப்பார்த்து சுமித்ராவை கடித்தது. இதனை அடுத்து வலி தாங்க முடியாமல் அலறிய சுமித்ராவை உடனடியாக அவரது கணவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்

ஆனால் அதற்குள் சுமித்ராவின் உடல் முழுவதும் விஷம் பரவியதால் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனை அடுத்து பழனி தனது மனைவியைத் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சுமித்ரா உயிர் இழந்தார்

மழைக்காலம் என்பதால் ஷூ போன்ற பொருள்களில் பாம்புகள் உள்ளே புகுந்து கொள்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இதுபோன்ற பொருட்களை சுத்தம் செய்யும் முன் அதனை கவனமாக பார்த்து சுத்தம் செய்ய வேண்டும் என்று என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிரியங்கா ரெட்டி கொலை எதிரொலி: மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் சமீபத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்பவர் நான்கு பேர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்

5 மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கி மர்ம மரணம்: கணவர், மாமியார் கைதானதால் பரபரப்பு

திருமணம் முடிந்து ஏழு மாதமே ஆன ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய மரணமடைந்த சம்பவம் விழுப்புரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

முடிவுக்கு வந்தது தனுஷின் அடுத்த படம்: படக்குழுவினர் கொண்டாட்டம்

தனுஷ் நடித்த 'அசுரன்' மற்றும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள

11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: ஆறு மாத கர்ப்பம் என அதிர்ச்சி தகவல்

திருச்சியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அந்த மாணவி 6 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்

பாட்டுப் பாடிய தோனி.வைரல் வீடியோ..!

எம்.எஸ்.தோனி, தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பரவலாக பலரால் பேசப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து சமூக ஊடகங்களில் வலம் வருகிறார்.