பாம்பை முகக்கவசமாக அணிந்து பேருந்தில் பயணித்த நபர்… கிலி பிடிக்கும் சம்பவம்!!!

  • IndiaGlitz, [Wednesday,September 16 2020]

 

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்தே மாஸ்க், சானிடைசர், சமூக இடைவெளி போன்ற வார்த்தைகளை நாம் அதிகம் புழங்க ஆரம்பித்து விட்டோம். தற்போது கொரோனாவை தடுக்க இதைத்தவிர வேறு வழியில்லை என்ற கட்டாயத்தால் உலக நாடுகளும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இதனால் பொது மக்கள் வெளியிடங்களில் நடமாடும்போது மாஸ்க் அணிவதை பழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் வசிக்கின்ற நபர் ஒருவர் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். அப்போது பாம்பை முகக்கவசம் போல கழுத்து மற்றும் வாய் பகுதியில் மூடியிருக்கும் வகையில் வைத்துக் கொண்டு பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். இக்காட்சியை பார்த்த பலரும் அலறி அடித்துக் கொண்டு ஓடியிருக்கின்றனர்.

இதுகுறித்து அவரது அருகில் இருந்த இன்னொரு நபர், முதலில் பார்க்கும் போது பாம்பு படத்தை பொறித்த மாஸ்க்கை அணிந்திருக்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த பாம்பு கொஞ்ச நேரத்தில் பேருந்தின் முன்னால் கம்பியை பிடித்து தாவியது. இதைக் கண்டதும் நான் அதிர்ந்தே போய்விட்டேன் எனத் தெரிவித்து இருக்கிறார். இந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி இருக்கிறது.

கொரோனா நேரத்தில் வைரம் பதித்த மாஸ்க், முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட மாஸ்க், ஏன் பட்டுத் துணியால் செய்யப்பட்ட மாஸ்க்கைக் கூட பார்த்தோம். ஆனால் முதல் முறையாக பாம்பை மாஸ்க்காக அணிந்த நபரை இப்போதுதான் பார்க்கிறோம் என்று இணையத்தில் பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் இங்கிலாந்து சுகாதாரத்துறை இனிமேல் பேருந்தில் பயணிக்கும்போது துணியால் ஆன முகக்கவசத்தை அணியுமாறு வலியுறுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

700 கி.மீ தூரம் பயணம்செய்து நீட் எழுத வந்த மாணவனுக்கு அனுமதி இல்ல… காரணத்தை கேட்டா நீங்களே டென்ஷன் ஆவீங்க…

கொரோனா தாக்கத்தால் மனிதனது இயல்பு வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கிறது. இந்நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது.

கொரோனா பாசிட்டிவ்வை பாசிட்டிவ்வாக எடுத்து கொண்ட நடிகர்-தயாரிப்பாளர்!

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் திரையுலக பிரபலங்களையும் பாரபட்சமின்றி தாக்கி வருகிறது என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

தீபாவளிக்கு வெளியாகிறது ராகவா லாரன்ஸின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் நடிப்பில் இயக்குனர் ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'லட்சுமி பாம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது

ஒரே மாதத்தில் கொரோனா தடுப்பூசி… அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!!!

அமெரிக்காவில் ஒரே மாதத்தில் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு கல்லறைத் தோட்டத்தில் நூதன தண்டனை… வைரல் தகவல்???

கொரேனா பரவலைத் தடுப்பதற்கு உலக நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்த இறுதியான முடிவு எதுவும் இதுவரை வெளியாகவில்லை