32 வருஷத்தில் 74 முறை விஷப்பாம்பு கடி… இன்றும் உயிர்வாழும் விசித்திர மனிதன்!!!

  • IndiaGlitz, [Friday,December 04 2020]

 

ஆந்திரமாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வரும் ஒரு ஏழைத் தொழிலாளி சுப்பிரமணியம். இவருடைய 5 வயதில் முதல் முறையாக பாம்பு கடித்தது எனக் கூறுகிறார். அதற்காக தீவிரச் சிகிச்சைபெற்று உயிர் தப்பினாராம். ஆனால் அப்படி ஆரம்பித்த பாம்புக்கடி கடந்த 32 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருப்பதுதான் கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

அதாவது சுப்பிரமணியம் தன்னுடைய வீட்டை விட்டு வெளியே வந்தால் கூட அங்கு நல்ல பாம்புகள் வந்து விடுமாம். அசந்தால் கடிதான். இப்படியே 74 முறை பாம்புக் கடி வாங்கி தொடர்ந்து சிகிச்சை பெற்று உயிர் வாழ்ந்து வருகிறார். ஒவ்வொரு முறையும் ஆயிரக் கணக்கில் செலவாகிறது எனவும் கூறுகிறார். இதனால் வீட்டை விட்டு வெளியே வரவும் பயந்து கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறார்.

கூலித்தொழில் செய்து வாழ்ந்து வரும் இவர் பாம்பு கடிக்கு பயந்து பெங்களூர் பகுதிக்கும் குடிபெயர்ந்து இருக்கிறார். ஆனால் அங்கும் பாம்பு வந்து கடித்தால் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி விட்டாராம். ஏன் இவரை மட்டும் தொடர்ந்து பாம்புகள் கடித்து வருகின்றன என்பது குறித்து தெளிவான விளக்கம் எதுவும் தெரியாத நிலையில் ஜோசியம், குறி கேட்பது, பரிகாரம் செய்வது போன்றவற்றையும் இவர் முயற்சி செய்து பார்த்து இருக்கிறார். ஆனால் பலன் எதுவும் இல்லை என்றே கூறுகிறார்.

மேலும் கூலி வேலையை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் இவர் தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார். இந்தச் சம்பவத்தைப் பார்த்த பலரும் ஒருவேளை பாம்பு குறிவைத்து தாக்கும் என்பது உண்மையாக இருக்குமோ? எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

'மாஸ்டர்' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்தார் 

கோயில் கும்பாபிஷேகங்களில் இனி தமிழ் இடம்பெறுமா??? முடிவுக்கு வரவிருக்கும் விவாதம்!!!

தமிழகத்தில் அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் அனைத்துக் கோவில் கும்பாபிஷேகங்களிலும் இனி தமிழ் பாடல்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்

மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி… பாராட்டு மழையில் நனையும் நடிகர் சோனு சூட்!!!

நடிகர் சோனுசூட்டின் மனித நேயத்தைப் பாராட்டி மகிழும் விதமாக ஆந்திராவில் உள்ள ஒரு கல்லூரி நிர்வாகம், அங்குள்ள ஒரு துறைக்கு நடிகர் சோனுசூட்டின் பெயரை வைத்து இருக்கிறது.

ஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நேற்று கால் சென்டர் டாஸ்க்கில் நன்றாக விளையாடியவர்களை வரிசைப்படுத்துதல் நிகழ்வில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

2021ல்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சி மாற்றம்‌: ரஜினியின் நெருங்கிய நண்பர் அறிக்கை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது அரசியல் வருகையை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது