அடிமுறை'க்காக சினேகா செய்த அர்ப்பணிப்பு

  • IndiaGlitz, [Friday,January 17 2020]

தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகிய ‘பட்டாஸ் திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த படத்தை தனுஷ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பிளாஷ்பேக்கில் வரும் தந்தை தனுஷின் திரைவியம் பெருமாள் கேரக்டர் மூலம் அடிமுறை கலை குறித்த விழிப்புணர்வு தற்போது தமிழகம் முழுவதும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷை அடுத்து இந்த படத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு கேரக்டர் என்றால் அது சினேகா நடித்த கேரக்டர் தான் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும். இந்த படத்தில் தனுஷுக்கு இணையாக அடிமுறை கலையை சினேகா வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் மேற்கொண்ட பயிற்சிகள் பல என்பது படக்குழுவினருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.

இந்த நிலையில் தற்போது அடிமுறை கலையை சினேகா பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பயிற்சியாளர் சொல்வது போலவே அடிமுறை பயிற்சியை சினேகா செய்யும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோவை பார்க்கும் போது அவர் எந்த அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த படத்தில் ஈடுபாட்டுடன் நடித்துள்ளார் என்பது புரியவரும்.

More News

உதயநிதியுடன் நேருக்கு நேர் மோதும் வைபவ்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சைக்கோ' திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதே தேதியில் வைபவ் நடித்துள்ள

தனுஷின் 'கர்ணன்' படத்தில் இணைந்த இளம் நடிகை!

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது 'பரியேறும் பெருமாள்'

நிர்பயா  வழக்கு - பாலியல் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்குத் தண்டனை

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒடுகின்ற பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இறந்த மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்திருந்தது

அம்மாவுக்கும் மகளுக்கும் தனித்தனி கள்ளக்காதலன்கள்: கொலையில் முடிந்த விபரீதம்

வேலூரை சேர்ந்த மக்கான் என்பவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மக்கானுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பெண்ணின் மகள் மகள்,

பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறினேன்: கமல்ஹாசன்

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிரிவு ஏற்படும் என நான் ஏற்கனவே கூறியது போலவே தற்போது நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது என பேட்டி ஒன்றில்