கமல் கட்சியில் இணைந்த மோடியின் டுவிட்டர் கணக்கை நிர்வகித்த பெண்!

பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை ஒரே ஒரு நாள் மட்டும் நிர்வகித்த பெண் இன்று கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்ட போது தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன் தாஸ் என்பவர் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை ஒரு நாள் மட்டும் நிர்வகிக்க நியமனம் செய்யப்பட்டார். இந்த செய்தி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதரவற்றவர்களுக்காக ‘ஃபுட் பேங்க் இந்தியா’ என்ற அமைப்பை நடத்தி வரும் சினேகா மோகன்தாஸ் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

கமல் கட்சியில் சேர்ந்த இவருக்கு சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சினேகா மோகன்தாஸ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும், மக்கள் நீதி மய்யத்தின் துணை மாநில செயலாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி சென்னை மண்டலத்திற்கு நியமித்த மரியாதைக்குரிய தலைவர் & நம்மவர் உயர்திரு டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி .

More News

விஜய்சேதுபதி ஜோடியாக மணிரத்னம் பட நாயகி: டைட்டில் அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழில் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து வரும் நிலையில் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

பாஜகவில் அரசியல் அவதாரம் எடுக்கிறாரா சவுரவ் கங்குலி???

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து பிசிசிஐயின் தற்போதைய தலைவராக பதவி வகித்து வரும் சவுரவ் கங்குலி பாஜக சார்பாக முழுநேர அரசியல் பணியில் ஈடுபடப் போகிறார்

தலையில் ஹெல்மெட் இல்லை … இளைஞரிடம் 2 மீட்டர் நீளத்துக்கு சலானை நீட்டிய போலீசார்…

கர்நாடகாவில் காய்கறி கடை வைத்து நடத்தி வரும் தொழிலாளி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹெல்மட் அணியாமல் தனது இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.

எஸ்.ஏ.சி தொடர்ந்த வழக்கு: விஜய் பட தயாரிப்பாளருக்கு சிறை!

இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்த பண மோசடி வழக்கில் விஜய் படத் தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

திரையரங்குகளுக்கு என்னென்ன கட்டுப்பாடு: தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் கடந்த ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.