close
Choose your channels

இசைஞானியிடம் வாழ்த்து பெற்ற சினேகா-கன்னிகா தம்பதி: என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?

Sunday, October 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாடலாசிரியர் மற்றும் கவிஞர் சினேகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்தை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் முன் நின்று நடத்தி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சினேகன் - கன்னிகா திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சினேகன் - கன்னிகா ரவி திருமணத்திற்கு தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல இயலாத நிலையில் இந்த தம்பதியை நேரில் வரவழைத்து தனது ஆசீர்வாதத்தை இசைஞானி இளையராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இருவருக்கும் மோதிரம் அணிவித்து தனது அன்பு பரிசாக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து கன்னிகா ரவி தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது: எங்கள் திருமணத்திற்கு வர இயலாததால் எங்களை நேரில் அழைத்து மோதிரம் அணிவித்து தன் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்த இசைஞானிக்கு நன்றிகள்’ என்று கூறியுள்ளார்.

சினேகனுக்கு இசைஞானி இளையராஜா மோதிரம் அணிவித்தது, சினேகன் மற்றும் கன்னிகா ரவி இசைஞானியின் காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos