close
Choose your channels

என்னை 10 கோடிக்கு விலை பேசினார்கள்: கமல் கட்சியின் திரையுலக பிரபலம் திடுக்கிடும் தகவல்!

Thursday, March 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தை அதிமுக மற்றும் திமுக மாறிமாறி கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் நிலையில் மூன்றாவது அணியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி இந்த முறை களத்தில் உள்ளது. கமல்ஹாசன் தனது கூட்டணியை வெற்றி பெற வைத்து முதல்வராக பதவி ஏற்பாரா? என்பதை தேர்தலுக்குப் பின்னர் தான் தெரிய வரும்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் விருகம்பாக்கம் வேட்பாளராக கவிஞர் சினேகன் போட்டியிடுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இவர் மக்கள் நீதி மய்யம் நடத்திய பல கூட்டங்களில் ஆவேசமாக கருத்துக்களை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விருகம்பாக்கம் தொகுதியில் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கிய சினேகன், என்னை 10 கோடி ரூபாய்க்கு ஒரு அரசியல் கட்சி விலை பேசியது என்று திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். இருப்பினும் எந்த அரசியல் கட்சி சினேகனுக்கு 10 கோடி ரூபாய் கொடுப்பதாக கூறியது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. கவிஞர் சினேகனின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.