வெற்றி பெறாவிட்டாலும் சொன்ன சொல்லை காப்பாற்றிய சினேகன்

  • IndiaGlitz, [Friday,November 24 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்டவர் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றால் அந்த பணத்தின் மூலம் பொதுமக்களுக்கு நூலகம் ஒன்றை கட்டித்தர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோதே சினேகன் குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறாத நிலையிலும் சொன்ன சொல்லை காப்பாற்றும் விதமாக தற்போது தஞ்சை மாவட்டத்தில் நூலகம் ஒன்றை அவர் கட்டி வருவதாகவும் வரும் பிப்ரவரி மாதம் இந்த நூலகம் திறக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நூலகத்தில் தொன்மை கால புத்தகங்கள் முதல் டிஜிட்டல் கால புத்தகங்கள் வரை வடிவமைக்க சினேகன் திட்டமிட்டுள்ளார். மேலும் இந்த நூலத்திற்கு ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட ஒருசில நட்சத்திரங்களும் உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நாச்சியார் பட விவகாரம்: ஜோதிகா, பாலா மீது நீதிமன்றத்தில் வழக்கு

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

திருமணத்திற்கு பின்னர் நமீதா நடிப்பாரா? கணவர் வீரா பதில்

நடிகை நமீதா-வீரா திருமணம் இன்று காலை திருப்பதில் சிறப்பாக நடைபெற்றது. இருவீட்டார் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் திரையுலகினர் புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

தேர்தல் நேரத்தில் கலக்க வரும் விஷ்ணு மஞ்சுவின் 'குறள் 388'

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிக்கும் 'குறள் 388' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் அவருடைய பிறந்த நாளில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது

கார்த்திக் சுப்புராஜூடன் 2வது முறையாக இணையும் தனுஷ்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இந்த பெரிய பட்ஜெட் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

கரு.பழனியப்பனின் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை

இயக்குனர் கரு.பழனியப்பன் இயக்கும் அடுத்த படமான 'புகழேந்தி என்னும் நான்' என்ற அரசியல் த்ரில்லர் படத்தின் நாயகனாக அருள்நிதி நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்