close
Choose your channels

திருமணம் முடிந்த மறுநாளே சினேகனுக்கு நிகழ்ந்த நிகழ்வு: திருப்பம் என்பது இதுதானோ?

Monday, August 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணம் முடிந்த மறுநாளே தனக்கு நிகழ்ந்த நிகழ்வு குறித்து குறிப்பிட்டுள்ள கவிஞர் சினேகன் ’திருமணம் நடந்தால் திருப்பம் ஏற்படும் என்பது இதுதானோ’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

சமீபத்தில் பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவி திருமணம் நடைபெற்றது என்பதும், இந்த திருமணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நடத்தி வைத்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் சினேகன் மற்றும் கன்னிகா ரவியின் புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் சினேகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் விமானத்தில் செல்லும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்

அதில் திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் ’ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடிப்பதற்காக சென்று சென்று கொண்டிருக்கிறேன். அதை தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானோ? என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இதற்கு முந்தைய பதிவில் கன்னிகா ரவியை முதன் முதலில் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது

காதலியே.. மனைவியாய்..
மனைவியே..காதலியாய்..
அமைவது பெரும் வரம்.

அந்த வரம் எனக்கு
கிடைத்திருக்கிறது.

இந்த புகைப்படம் அதை நினைவுப்படுத்துகிறது...

சினேகனின் இந்த இரண்டு பதிவுகளும் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.