குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர். உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,March 02 2017]

ஒருபக்கம் நேற்று முதல் தமிழகத்தில் பெப்சி கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை விற்பதில்லை என்று வணிகள் முடிவெடுத்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோக் உள்பட குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கியுள்ளது.
நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுப்பதை தடுக்க வேண்டும் என்று திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் விசாரணையில் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த நவம்பர் மாதம் இடைக்கால தடை விதித்தது.
இந்த இடைக்கால தடையை எதிர்த்து குளிர்பான ஆலை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரை மட்டுமே பயன்படுத்துவதாகவும், இதனால் இடைக்கால தடையை நிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், தாமிபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி இன்று உத்தரவிட்டுள்ளது.

More News

குஷி-2, வாலி-2 படங்களின் ஹீரோக்கள் யார். எஸ்.ஜே.சூர்யா

அஜித் நடித்த 'வாலி' மற்றும் விஜய் நடித்த 'குஷி' என தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களின் வெற்றி படத்தை இயக்கிய பெருமை பெற்றவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா.

நெடுவாசலுக்காக ஒரு பாடல். பிரபல இசையமைப்பாளர் திட்டம்

சமீபத்தில் நடந்து முடிந்த இளைஞர்களின் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு வெற்றி போராட்டத்தில் திரையுலகினர்கள் தந்த ஆதரவும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் ஜல்லிக்கட்டு குறித்த பாடல் ஒன்றை வெளியிட்டு போராட்டக்கார்களிடமும், மக்களிடமும் எழுச்சியை ஏற்படுத்தினர்...

அருண்ஜேட்லியுடன் பெப்சி நிறுவனத்தின் சிஇஓ அவசர ஆலோசனை

சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் பல இடங்களில் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தில் பெப்சி, கோக் உள்பட பல வெளிநாட்டு பானங்களை குடிப்பதை நிறுத்த வேண்டும்

தயாரிப்பாளர் சங்க தேர்தல். தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெறும் என்றும், இந்த தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகள் அன்றே எண்ணப்பட்டு அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்...

'பாகுபலி 2' சிறப்பு காட்சியில் பிரதமர் மோடி, ராணி எலிசபெத்?

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி, உலகமே இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்கும் வகையில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது தயாராகி வரும் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'பாகுபலி 2' படத்திற்கு முதல் பாகத்தை விட பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...