close
Choose your channels

9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சென்னை ஐ.டி இளம்பெண்

Tuesday, July 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் மன அழுத்தம் உள்பட பல்வேறு காரணங்களால் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வரும் நிலையில் நேற்று சென்னை ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்

ஆந்திராவை சேர்ந்த பிரியா என்ற 24வயது இளம்பெண் ஒருவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். சென்னையின் விடுதி ஒன்றில் தங்கி பணிபுரிந்து கொண்டிருந்த இவர் திடீரென அலுவலகத்தின் 9வது மாடிக்கு சென்று அங்கிருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக ராயப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரியாவின் மரணம் குறித்து ஆந்திராவில் உள்ள அவரது பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிரியாவின் தற்கொலைக்கு மன அழுத்தம், வேலைப்பளு, உயர் அதிகாரிகளின் டார்ச்சர் அல்லது குடும்ப பிரச்சனை இவற்றில் எது காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவருடன் பணிபுரிந்த ஊழியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.