close
Choose your channels

முடிவுக்கு வந்தது ஷங்கர் பட பிரச்சனை: விரைவில் படப்பிடிப்பு

Friday, August 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படம் ஒன்று நீண்டகாலமாக பிரச்சனையில் இருந்த நிலையில் தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முயற்சியால் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த வடிவேலுவுக்கும் தயாரிப்பாளர் ஷங்கருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து இந்த படம் பல ஆண்டுகளாக படப்பிடிப்பு தொடராமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஷங்கர் மற்றும் வடிவேலு ஆகிய இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.