'கோபேக் சைனா வைரஸ்': தீப்பந்தம் ஏந்தி திடீரென கோஷம் போட்டதால் பரபரப்பு

கொரோனா வைரசுக்கு எதிராக இந்திய அரசு கடந்த சில நாட்களாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் அரசுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அதனை நிரூபிக்கும் வகையில் நேற்று இரவு 9 மணிக்கு அனைவரும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று கூறினார். அதிலும் சமூக விலகலை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகள், மற்றும் டார்ச்லைட் மட்டும் அடிக்க வேண்டும் என்றும் அவர் தெளிவாக கூறியிருந்தார்

இருப்பினும் ஒருசில ஆர்வக் கோளாறுகள் பிரதமர் கூறியதை அரைகுறையாக புரிந்து கொண்டு நேற்று இரவு 9 மணிக்கு தீப்பந்தங்களை ஏந்தி தெருவில் ஊர்வலம் போல் வர ஆரம்பித்துவிட்டனர். சமூக விலகலையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு அவர்கள் கூட்டமாக கூடி ’கோபேக் சைனா வைரஸ்’ போன்ற கோஷங்கள் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஒரு நல்ல நோக்கத்திற்காக பிரதமர் கூறியதை தவறாக புரிந்து கொண்டு தீப்பந்தம் ஏற்றிய இவர்களுக்கு உண்மையில் மூளை இருக்கிறதா அல்லது மூளைக்கு பதில் வேறு ஏதும் இருக்கிறதா என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஒருசிலர் தீப்பந்தங்களை கையில் ஏந்திக்கொண்டு சாலைகளில் ஓடிச்சென்று ஏதோ திருவிழாவை கொண்டாடுவதுபோல் கொண்டாடியதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற அரைகுறை ஆசாமிகளால் கொரோனா வைரஸ் மேலும் பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்

More News

நேற்றிரவு 9 மணியின் சாட்டிலைட் புகைப்படம்: இணையத்தில் வைரல் 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற கூறினார் இந்த நிகழ்வை கோடிக்கணக்கான இந்தியர்கள் நிகழ்த்தி நாட்டின் ஒற்றுமையை நிரூபித்தனர்

9 மணி விளக்கேற்றும் நிகழ்வு: ஆர்வக்கோளாறால் ஏற்பட்ட அசம்பாவிதம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு கொரோனாவுக்கு எதிரான போரில், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிப்பதற்காக

டுவிட்டரில் விண்ணப்பித்தாலும் உதவி கிடைக்கும்: தமிழக முதல்வரின் செயல்

முன்பெல்லாம் அரசிடம் இருந்து ஒரு உதவி தேவை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்து அது அரசின் கவனத்திற்கு சென்று அதன்பின்னர்

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 571

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார்.

இந்தியாவில் ஒரே நாளில் 11 பேர் பலி: மொத்த எண்ணிக்கை 79ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலியாக்கி வரும் நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக