ஒரே வீட்டில் 3 பெண்கள் காதல் திருமணம்: அடுத்தடுத்து நடந்த 2 தற்கொலைகள்

  • IndiaGlitz, [Monday,August 10 2020]

ஒரே வீட்டில் 3 பெண்கள் அடுத்தடுத்து காதல் திருமணம் செய்துகொண்ட விரக்தியால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம்-நீலாவதி தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பன்னீர்செல்வம்-நீலாவதி தம்பதியின் முதல் இரண்டு மகள்களான மீரா, கல்பனா ஆகிய இருவரும் காதலித்து பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டனர். இதனை அடுத்து அந்த குடும்பத்தினர் மிகவும் வருத்தத்துடன் இருந்த நிலையில் மூன்றாவது மகளான மீனாவும் ஒரு இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது 

இதனை அடுத்து மீனாவின் சகோதாரர் பால்ராஜ் தனது தங்கையை கண்டித்துள்ளார். ஏற்கனவே இரண்டு சகோதரிகள் காதல் திருமணம் செய்து விட்டதால் வீடே மிகவும் வருத்தத்தில் இருப்பதாகவும் நீயும் காதல் திருமணம் செய்ய வேண்டாம் என்றும் நான் மாப்பிள்ளை பார்க்கிறேன் அதுவரை பொறுத்திரு என்று கூறியிருந்தார் 

ஆனால் மீனா தனது காதலில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து பால்ராஜ் தனது சகோதரிக்கு தினந்தோறும் அட்வைஸ் செய்து கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் வெறுப்பான மீனா தனது காதலனுடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பால்ராஜ் தனது மூன்று சகோதரிகளும் காதல் திருமணம் செய்துகொண்ட மனவருத்தத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் 

3 மகள்களும் காதல் திருமணம் செய்து கொண்ட வருத்தமும், அதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் மகன் தற்கொலை செய்துகொண்ட சோகமும் தாய் நீலாவதியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மகனின் இறுதிச் சடங்கை முடித்து வந்த அடுத்த நாளே அவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தில் மூன்று பெண்கள் காதல் திருமணம் செய்துகொண்டதால் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

கொரோனா வைரஸ் மெதுவாகக் கூட அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்… எச்சரிக்கும் புது ஆய்வு!!!

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு குறைந்தது 4-5 நாட்களில் அதன் அறிகுறிகளை வெளிப்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

பாறைமீது மோதிய சரக்கு கப்பல்!!! 1,000 டன் பெட்ரோல் கடலில் கலந்ததாகப் பரபரப்பு!!!

கடந்த மாதம் 25 ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள தீவு நாடான மொரிஷீயஸ் கடல் பகுதியில் 3,800 டன் பெட்ரோல் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அங்குள்ள பாறை

ரஷ்யாவின் வோல்கா நதியில் 4 தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

ரஷ்யாவில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

இன்றும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: என்ன நடக்குது தமிழகத்தில்?

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 5 ஆயிரத்தை தாண்டி வருகிறது என்பதும் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும்

மக்கள் வைத்த உயரத்தைத் தக்கவைத்த தந்திரம்: ரஜினி குறித்து வைரமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று திரையுலக பிரபலங்கள் பலரும் காமன் டிபி போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்