என் பள்ளித்தோழி எனக்கே சித்தியா? தந்தை மீதான கோபத்தால் மகனின் வெறிச்செயல்!

  • IndiaGlitz, [Sunday,November 29 2020]

மகனின் பள்ளி தோழியை அவரது தந்தையே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் கோபமடைந்த மகன் செய்த வெறிச்செயல் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தென்காசியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு மனைவியும் திருக்குமரன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் திருக்குமரன் திருமணமாகி தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தன்னுடன் படித்த பள்ளி தோழியான சண்முகசுந்தரி என்பவரை தனது தந்தை தங்கராஜ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதுமட்டுமின்றி தங்கராஜ் தனது சொத்துக்களின் ஒரு சில பகுதியை இரண்டாவது மனைவி சண்முகசுந்தரிக்கு எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ் இது குறித்து தனது தந்தையுடன் சண்டை போட்டுள்ளார்

ஒரு கட்டத்தில் சண்டை முற்றியதையடுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தந்தை தங்கராஜை வெட்டி கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

தனது பள்ளி கால தோழியே தனது சித்தியாக வந்தது மட்டுமின்றி தனது சொத்தையும் பங்கு பெற்றதால் ஆத்திரமடைந்த திருக்குமரன் தந்தையை கொலை செய்துவிட்டு தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

இணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்திசாலித்தனமான போட்டியாளர்களில் ஒருவராக ரம்யா பாண்டியனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர். சுரேஷுக்கு எவிக்சன் பாஸ் கிடைக்கவிடாமல் செய்தது மட்டுமின்றி,

காமெடி நடிகருடன் குத்தாட்டம் போட்ட சம்யுக்தா: வீடியோ வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சம்யுக்தா ஆரம்பத்தில் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய போட்டியாளராக இருந்தார்.

தாயிடம் இருந்து சிம்புவுக்கு கிடைத்த எதிர்பாராத பரிசு!

சிம்பு தனது தாயிடம் இருந்து கிடைத்த எதிர்பாராத பரிசால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார் என்ற தகவல் தற்போது புகைப்படத்துடன் வெளியே வந்துள்ளது 

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா: கிரிக்கெட் மைதானத்தில் ஒரு காதல்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பதும்

அர்ச்சனாவின் 'அன்பு' குறித்து கேள்வி எழுப்பிய சுரேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரும்வரை குரூப் என்றால் என்னவென்றே தெரியாமல் போட்டியாளர்கள் இருந்தனர். ஆனால் அர்ச்சனா எண்ட்ரி ஆன உடனேயே தனக்கென