close
Choose your channels

என் பள்ளித்தோழி எனக்கே சித்தியா? தந்தை மீதான கோபத்தால் மகனின் வெறிச்செயல்!

Sunday, November 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகனின் பள்ளி தோழியை அவரது தந்தையே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் கோபமடைந்த மகன் செய்த வெறிச்செயல் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தென்காசியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு மனைவியும் திருக்குமரன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் திருக்குமரன் திருமணமாகி தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தன்னுடன் படித்த பள்ளி தோழியான சண்முகசுந்தரி என்பவரை தனது தந்தை தங்கராஜ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதுமட்டுமின்றி தங்கராஜ் தனது சொத்துக்களின் ஒரு சில பகுதியை இரண்டாவது மனைவி சண்முகசுந்தரிக்கு எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ் இது குறித்து தனது தந்தையுடன் சண்டை போட்டுள்ளார்

ஒரு கட்டத்தில் சண்டை முற்றியதையடுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தந்தை தங்கராஜை வெட்டி கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

தனது பள்ளி கால தோழியே தனது சித்தியாக வந்தது மட்டுமின்றி தனது சொத்தையும் பங்கு பெற்றதால் ஆத்திரமடைந்த திருக்குமரன் தந்தையை கொலை செய்துவிட்டு தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.