மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி… பாராட்டு மழையில் நனையும் நடிகர் சோனு சூட்!!!

  • IndiaGlitz, [Friday,December 04 2020]

 

நடிகர் சோனுசூட்டின் மனித நேயத்தைப் பாராட்டி மகிழும் விதமாக ஆந்திராவில் உள்ள ஒரு கல்லூரி நிர்வாகம், அங்குள்ள ஒரு துறைக்கு நடிகர் சோனுசூட்டின் பெயரை வைத்து இருக்கிறது. இது தனக்கு பெருமை அளிப்பதோடு மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் நடிகர் சோனு சூட் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருந்தபோது, போக்குவரத்து எதுவும் இன்றி புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். அப்போது நடிகர் சோனு சூட், தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். வேலையிழந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.

மேலும் விவசாயம் புரிய வசதியின்றி சொந்த மகள்களை வைத்தே நிலத்தை உழுத விவசாயிக்கு டிராக்டர் ஒன்றை அனுப்பி வைத்தார். செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் இருந்த ஏழை மாணவர்களுக்கு செல்போன்களை வாங்கி அனுப்பி வைத்தார். நெட்வொர்க் வசதி இல்லாமல் இருந்த ஒரு மலைக் கிராமத்திற்கு சொந்தமாக ஒரு செல்போன் டவரையே உருவாக்கி கொடுத்தார். இப்படி சோனு சூட்டின் மனிதநேய செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நடிகர் சோனு சூட்டின் மனித நேயத்தை கவுரவிக்கும் வகையில் ஐ.நா சபை சஸ்டைனபிள் டெவலப்மெண்ட் கோல்ஸ் விருதினை வழங்கியது. அதேபோல தற்போது ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் சரத்சந்திரா கல்லூரி நிர்வாகம் இவரது பெயரை ஒரு துறைக்கே வைத்து கவுரவித்து இருக்கிறது. இதுகுறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

More News

ஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நேற்று கால் சென்டர் டாஸ்க்கில் நன்றாக விளையாடியவர்களை வரிசைப்படுத்துதல் நிகழ்வில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

2021ல்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சி மாற்றம்‌: ரஜினியின் நெருங்கிய நண்பர் அறிக்கை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது அரசியல் வருகையை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 

ஆனந்த் சங்கருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மனைவி: படக்குழுவினர் ஆச்சரியம்

பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தற்போது விஷால், ஆர்யா இணைந்து நடித்து வரும் 'எனிமி என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

மூன்று வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி ஆகும் ஸ்ரீதிவ்யா: இளம்நாயகனுக்கு ஜோடி

பிரபல இயக்குனர் அட்லி தயாரிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்திற்கு பின் நடிகை ஸ்ரீதிவ்யா கடந்த மூன்று ஆண்டுகளாக

சிவாஜி, கமல் பட நடிகையின் கணவர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாரதவிலாஸ், பைலட் பிரேம்நாத் உள்ளிட்ட படங்களிலும், கமல்ஹாசன் நடித்த பட்டாம்பூச்சி, சினிமா பைத்தியம், தேன்சிந்துதே வானம்