close
Choose your channels

சூறையாட வாட, சுத்தி அள்ளி தந்துரு சூரா: 'மகான்' சிங்கிள் பாடல் வைரல்

Wednesday, September 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த ‘மகான்’ திரைப்படத்தில் சிங்கிள் பாடளான சூறையாட்டம் என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் அந்த பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சூறையாட வாடா சுத்தி அள்ளி தந்துடு சூரா
வாள் எங்களுக்காக ஏந்தி உன் எல்லை வரை வா
தாண்டி வாடா வீரா, வந்து தஞ்சம் தந்துட்டு போடா
உன் மல்லுக்க்கும் சொல்லுக்கும் முன் எவன் நிக்க போறான் நேரா

என்று தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன் இசையில் மகாலிங்கம் மற்றும் சந்தோஷ் நாராயணன் குரலில் உருவாகியுள்ள இந்த பாடலை முத்தமிழ் என்பவர் எழுதியுள்ளார். இந்த பாடல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் லலித்குமார் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.