நீங்கள் எல்லாம் எனது ரசிகர்களாக இருக்க தகுதியற்றவர்கள்: 'மாமன்' ரிலீஸ் தினத்தில் சூரி வேதனை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சூரி நடித்த ‘மாமன்’ என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. முதல் பாதி ஜாலியாகவும் இரண்டாவது பாதி எமோஷனலாகவும் இருப்பதாக படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சூரி ரசிகர்கள் இன்று ‘மாமன்’ படம் வெற்றி அடைய வேண்டும் என்று மண் சோறு சாப்பிட்டனர். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் நடிகர் சூரி இது குறித்து ஆதங்கமாக தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
‘மாமன்’ படம் வெற்றி அடைய மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கு எனக்கு வெட்கமாக உள்ளது. தம்பிகளா இது ரொம்ப முட்டாள்தனமானது, படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் அந்த படம் ஓடும், அதை விட்டுவிட்டு மண் சோறு சாப்பிட்டால் படம் எப்படி எடுத்தாலும் ஓடிவிடுமா என்ன? என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.
உங்கள் செயல் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது, அந்த பணத்திற்கு நாலு பேருக்கு தண்ணீர், மோர், உணவு வாங்கி கொடுத்திருக்கலாம், இது போன்ற செயலை செய்பவர்கள் எனது ரசிகர்களாக இருக்க தகுதியற்றவர்கள்’ என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com